TNPSC Tamil MCQ Questions and Answers | Part-3:
1) மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கும் ” என்று கூறியவர் ______
A) ஔவையார்
B) திருமூலர்
C) பாரதியார்
D) தொல்காப்பியர்
ANSWER: B
2) காற்றால் இயக்கப்பட்ட கப்பல்கள் _______ எனப்பட்டன.
A) பாோர்க்கப்பல்கள்
B) நீராவிக் கப்பல்கள்
C) நீர்மூழ்கிக் கப்பல்கள்
D) பாய்மரக் கப்பல்கள்
ANSWER: D
3) இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களுள் காற்று மாசுபாடு _______ இடத்தில் உள்ளது.
A) மூன்றாம்
B) நான்காம்
C) ஐந்தாம்
D) பத்தாம்
ANSWER: C
4) நம்மால் ______ ஐந்து நாட்கள் உயிர் வாழ முடியும்
A) உறக்கமின்றி
B) காற்றின்றி
C) உணவின்றி
D) நீரின்றி
ANSWER: D
5) குளிர்பதனப் பெட்டி வெளிவிடும் நச்சுக்காற்று ________
A) கந்தக டை ஆக்ஸைடு
B) குளோரோ புளோரோ கார்பன்
C) நைட்ரஜன்டை ஆக்ஸைடு
D) கார்பன் டை ஆக்ஸைடு
ANSWER: B
6) கனிம வளத்தைக் காக்க வேண்டுமென்றால் நாம் எத்தகைய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்?
A) வெப்பாற்றலை
B) காற்றாற்றலை
C) நீராற்றலை
D) அணுவாற்றலை
ANSWER: B
7) மேற்கிலிருந்து வீசும் காற்று ‘வெப்பத்தன்மையுடன் இருக்கக் காரணம் ____
A) வறண்ட நிலப்பகுதியிலிருந்து கோடைக்காற்றாக வீசுவதால்
B) மலைப்பகுதியிலிருந்து மழைக் காற்றாக வீசுவதால்
C) கடல் பகுதியிலிருந்து இதமான காற்றாக வீசுவதால்
D) பனிப்பகுதியிலிருந்து குளிர்ச்சியான காற்றாக வீசுவதால்
ANSWER: A
8) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் புயல்மழை பொழியக் காரணம் ____
A) தென்மேற்குப் பருவக்காற்றால் தாழ்வுமண்டலங்கள் உருவாவதினால்
B) கடல்காற்று, பெருமழையோடு கூடிய புயல்காற்று தரைமீது வீசுவதினால்
C) பனிமலையிலிருந்து பெருமழையோடு கூடிய புயல்காற்று தரைமீது வீசுவதினால்
D) வடகிழக்குப் பருவக்காற்றால் தாழ்வுமண்டலங்கள் உருவாவதினால்
ANSWER: D
9) மேற்கு திசையிலிருந்தும் கிழக்கு திசையிலிருந்தும் வீசும் காற்று முறையே __________ என்றழைக்கப்படும்.
A) மேல்பக்கக் காற்று, கீழ்ப்பக்கக் காற்று
B) கீழ்க்காற்று, மேல்காற்று
C) கீழ்ப்பக்கக் காற்று, மேல்பக்கக் காற்று
D) மேல்காற்று, கீழ்க்காற்று
ANSWER: D
10) நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” இதில் வளிதொழில்‘ என்னும் சொல் உணர்த்துவது _______
A) காற்றின் வேகத்தையும் அது வீசும் திசையையும்
B) காற்று வீசும் திசையெல்லாம் ஆட்சி செய்தவன்
C) காற்றைப் போல எல்லாத திசையிலும் தொழில் புரிந்தவன்
D) காற்று கடலில் வீசுவதைப் போல போர் புரிந்தவன்
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
11) காற்று மாசு பாட்டிற்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஐக்கிய நாடுகளின் “சிறுவர் நிதியம்” கூறுவது யாது?
A) போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்கி பாதிக்கப்படுகிறது
B) போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுப் பாதை பாதிக்கப்படுகிறது
C) போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூளைவளர்ச்சி பாதிக்கப்படுகிறது
D) போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல்வளர்ச்சி பாதிக்கப்படுகிறது
ANSWER: C
12) பெயர் மற்றும் அதன் பயனிலைக்கு ஏற்ப காற்றின் வேகத்தையும் தன்மையையும் உணரமுடியும்‘ அந்த வகையில் தென்றல் மற்றும் வாடைக்காற்றின் பயனிலைகள் முறையே ______
A) வீசும், அடிக்கும்
B) தழுவும், வீசும்
C) அடிக்கும் வீசும்
D) வீசும், தழுவும்
ANSWER: A
13) நடுக்கடல் வழியே முசிறித் துறைமுகத்திற்குப் பருவக்காற்றின் துணையால் விரைவாக வந்துசேரும் வழியினைக் கண்டுபிடித்தார் கிரேக்க மாலுமி ஹிப்பலஸ். அதனால் _____
A) நடுக்கடல் பயணத்தை எளிமையாக்கிற்று
B) யவணக் கடல் வணிகம் பெருகிற்று
C) முசிறி மக்களுக்கு கடல் பயணம் எளிமையாயிற்று
D) பருவக் காற்றே கடல் பயணத்திற்கு உதவியாயிற்று
ANSWER: B
14) தீபாவளிக்கு விலையுயர்ந்த புதுத் துணியைத் தன் மகன் மணிகண்டனுக்கு வாங்கித் தந்த அவன் தந்தை பட்டாசுகளை வாங்கித் தர மறுத்துவிட்டார். அடம்பிடித்து அழுத மணிகண்டனிடம் பட்டாசு வேண்டாம்என்பதற்கு
1) பட்டாசுகளை வாங்குவதினால் காசு விரயமாகும்.
2) பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலி பிறருக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும்.
3) பட்டாசுகளின் புகை காற்றினை மாசுபடுத்தும்.
4) தெருக்களில் அதிகக் குப்பைகளைக் குவித்து நிலத்தை மாசுபடுத்தும். என்று காரணங்களைக் கூறி சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட மணிகண்டன் சமாதானமாகி ஒப்புதலாகத் தலையாட்டினான். தந்தை கூறிய காரணங்களைப் பாதிப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்துக.
A) 1, 3, 2, 4
B) 2, 1, 4, 3
C) 3, 2, 4, 1
D) 4, 2, 1, 3
ANSWER: C
15) ஊட்டி தாவரவியல் பூங்காவில் கல்விச் சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். குளிரை ரசித்து அனுபவித்தபடி ஒரு சில மாணவர்கள் பூங்காவின் நடுவில் இருந்த கண்ணாடிப் பகுதிக்குள் சென்று பார்வையிட்ட பின்பு வெளியை நின்றிருந்த ஆசிரியரிடம் ,’ சார் ! வெளிய இவ்வளவு குளிரா இருக்கும்போது கண்ணாடிப் பகுதிக்குள்ள மட்டும் வெதுவெதுப்பா இருக்கே! ஏன் சார்? ஏன் இப்படி வைச்சுருக்காங்க?” என்று கேட்டனர். அதற்கு ஆசிரியர்
1) வெளியில் இருக்கும் குளிர் உள்ளே இருக்கும் செடிகளை தாக்கக் கூடாது.
2) பசுமை இல்ல வாயுக்களினால் உலக வெப்பமயமாதலை மக்களுக்கு உணர்த்த விரும்பியதன் ஒரு முயற்சி.
3) கண்ணாடி பகுதிக்குள் வெப்பத்தை உருவாக்கும் ஒரு தனி அமைப்பு இருக்கிறது.
4) கண்ணாடிப் பகுதி பார்வையாளர்களை வெகுவாகக் கவர வேண்டும். இவற்றுள் பொருந்தாதது என்று எதனைக் கூறலாம்?
A) கண்ணாடி பகுதிக்குள் வெப்பத்தை உருவாக்கும் ஒரு தனி அமைப்பு இருக்கிறது.
B) கண்ணாடிப் பகுதி பார்வையாளர்களை வெகுவாகக் கவர வேண்டும்.
C) பசுமை இல்ல வாயுக்களினால் உலக வெப்பமயமாதலை மக்களுக்கு உணர்த்த விரும்பியதன் ஒரு முயற்சி.
D) வெளியில் இருக்கும் குளிர் உள்ளே இருக்கும் செடிகளை தாக்கக் கூடாது.
ANSWER: A
16) வங்கக் கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் ஜனவரி 29ஆம் தேதியன்று ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது அடுத்த நாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் கன மழையும் பதிவானது. தமிழ்நாட்டில் பொதுவாக இந்த காலகட்டம், பெரிய அளவில் நெல் அறுவடை நடக்கும் காலகட்டம். பல இடங்களில் நெல் அறுவடை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தபோது, ஜனவரி 30, பிப்ரவரி 1, 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்தது. இதனால், அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருந்த பயிர்களும் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்தன” என்று செய்திவாசிப்பாளர் வாசித்த செய்தியைக் கேட்டு ‘கலிகாலம் முத்திப்போச்சு, காலமில்லாக் காலத்துல எல்லாம் மழ பெஞ்சு பொழப்பக் கெடுக்குது‘ என்று புலம்பினார் கண்ணனின் பாட்டி. அதற்குக் கண்ணன் பருவம் தவறிய மழைக்குக் காரணம் கலிகாலம் இல்ல பாட்டி _________ என்று கூறினான்.
A) கதிரியக்க மாசுபாடு
B) ஓசோன் செறி தளர்வு
C) உலக வெப்பமயமாதல்
D) புகை மூட்டப் பரவல்
ANSWER: C
17) ஹாய் ! என்ன புது வண்டியா? சூப்பர்டா வித்தியாசமா இருக்கு! ” என்று கல்லூரிக்குத் தன் புது இருசக்கர வாகனத்தில் வந்த மாறனைப் பார்த்து விமலன் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் கேட்டான். ”ஆமான்டா! இது ஈ–பைக்‘ என்றான் மாறன். ‘ஓ! பெட்ரோல மிச்சப்படுத்தப் போறாயாக்கும்” என்று கிண்டலாகக் கேட்டான் விமலன். அதற்கு மாறன் ___________(மாறனிடத்தில் நீ இருந்தால் என்ன பதில் கூறியிருப்பாய்?
A) பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே இருப்பதனால் பின்னாளில் ஒரு செலவைக் குறைக்கும் முயற்சி
B) புகையில்லா வாகனத்தைப் பயன்படுத்தி காற்றின் மாசைக் குறைக்க என்னால் ஒரு சிறிய முயற்சி
C) எடை குறைவாகவும் பார்வைக்கு அழகாகவும் இருப்பதினால் கையாளுவது எளிதானதால்
D) எனக்குப் பிடித்த வண்ணம் இந்த வகை வாகனத்தில் மட்டுமே கிடைத்ததால்
ANSWER: B
18) காற்று மாசடைவதைத் தவிர்க்க விரும்பும் நீ உன் நண்பர்களுக்குக் கூறும் அறிவரையாகக் கீழ்வருவனவற்றுள் எவற்றைக் கொள்ளலாம் எவற்றைத் தள்ளலாம்?
1) அடுக்ககத்தில் குடியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு செடியையாவது வளர்க்க வேண்டும்.
2) இருசக்கரவாகனத்தில் வரும்போது சாலையின் ஓரமாகப் புகை செல்லும் வகையில் வாகனத்தை இயக்க வேண்டும்.
3) ஒவ்வொருவரும் தனித்தனி மகிழ்வுந்துகளில் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து குழுவாக ஒரு வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
4) எப்பொழுதும் தூசிக்காற்று வராதபடி குளிரூட்டப்பட்ட அறையினையே பயன்படுத்த வேண்டும்.
A) 1 மற்றும் 4 கொள்ளத்தக்கது: 2 மற்றும் 3 தள்ளத்தக்கது
B) 2 மற்றும் 3 கொள்ளத்தக்கது: 1 மற்றும் 4 தள்ளத்தக்கது
C) 1 மற்றும் 2 கொள்ளத்தக்கது: 3 மற்றும் 4 தள்ளத்தக்கது
D) 1 மற்றும் 3 கொள்ளத்தக்கது: 2 மற்றும் 4 தள்ளத்தக்கது
ANSWER: D
19) கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்– உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை,”- திருமழிசையாழ்வார். – ‘கொண்டலும் வெண்ணெயும்‘ முரண்பட்ட சொற்கள். இவ்விரண்டும் முரண்படுவது _____
A) குணத்தால்
B) நிறத்தால்
C) வடிவத்தால்
D) பயன்பாட்டால்
ANSWER: B
20) வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளிச் சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்” – பெரிய புராணம் இப்பாடலில் காற்றின் வகைகளுள் ஒன்றினைக் கூறும் சொல் இடம்பெற்றுள்ள வரி எது?
A) வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
B) சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்”
C) பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளிச்
D) சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers

21) செய்தி : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தீபாவளி கொண்டாடாத கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். விளக்கம்: வேட்டங்குடிபட்டி என்னும் கிராமத்தில் பறவைகளின் பாதுகாப்பிற்காக அந்த கிராம மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிப்பதில்லை, தீபாவளியும் கொண்டாடுவதில்லை. வேட்டங்குடிபட்டி கிராம மக்களின் மனித நேயத்தைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பாராட்டினார். செய்தியும் விளக்கமும் நமக்கு உணர்த்துவன
1) வேட்டங்குடிபட்டி மக்களுக்குப் பறவைகளின் மீது அக்கறை இருந்தது.
2) வேட்டங்குடிபட்டி கிராமமே பறவைகளின் சரணாலயமாக இருந்திருக்கிறது.
3) வேட்டங்குடிபட்டி மக்கள் சமுதாய அக்கறையோடு பட்டாசுகள் வெடிப்பதை வெறுத்தனர்
4) வேட்டங்குடிபட்டி மக்கள் மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெறவேண்டும் என்ற ஆசை உடையவர்கள்.
பொருந்தாத கருத்து என்று கூறவேண்டுமானால் எதனைக் கூறலாம்?
A) வேட்டங்குடிபட்டி மக்கள் சமுதாய அக்கறையோடு பட்டாசுகள் வெடிப்பதை வெறுத்தனர்
B) வேட்டங்குடிபட்டி மக்களுக்குப் பறவைகளின் மீது அக்கறை இருந்தது.
C) வேட்டங்குடிபட்டி கிராமமே பறவைகளின் சரணாலயமாக இருந்திருக்கிறது.
D) வேட்டங்குடிபட்டி மக்கள் மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெறவேண்டும் என்ற ஆசை உடையவர்கள்.
ANSWER: D
22) தேர்த்திருவிழாவில் சாமி தேரில் அமர்ந்திருக்க பக்தர்கள் தேரினை வடம்பிடித்து ஊர்வலமாக இழுத்துவந்துகொண்டிருந்தனர். ஊர் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.. தேரோடும்பாதையில் தேருக்கு முன்னதாக வாணவேடிக்கைகளும் மேளதாளங்களும், ஆடலும், மந்திர முழக்கங்களும் நிகழ்ந்தபடி ஊர்வலம் மெதுவாக வீதிகளில் சென்றது அப்பகுதியையே பக்திப் பரவசத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.” – இங்கு சமுதாய அக்கறையோடு தவிர்த்திருக்க வேண்டியதாக எதனைக் குறிப்பிடலாம்?
A) வாணவேடிக்கைகள்
B) மந்திர முழக்கங்கள்
C) மேளதாளங்கள்
D) தேர்த் திருவிழாக்கள்
ANSWER: A
23) செய்தி 1 : எரிமலை வெடிப்பதினால் வெளிப்படும் தூசு, புகை, சாம்பல், கார்பன் – டை– ஆக்ஸைடு முதலானவை காற்றை மாசுபடுத்துகின்றன.
செய்தி 2 : விண்வெளியில் உள்ள எரிகற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விழுவதாலும் காற்று மாசடைகின்றது.
செய்தி 3: தொழிற்சாலைகளிலிருந்தும் பெரிய நகரங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் திடக் கழிவுகளால் காற்று மாசடைகின்றது.
செய்தி 4: வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் நச்சுக் காற்றினாலும் காற்று மாசடைகின்றது. இச்செய்திகள் மூலம் நாம் உணர வேண்டிய கருத்து _________
A) காற்று இயற்கையினால் அதிக மாசடைகின்றது.
B) இயற்கையாக உருவாகும் மாசினைக் கட்டுப்படுத்த வேண்டும்.
C) காற்று செயற்கையாக மாசடைகின்றதைத் தவிர்க்க இயலாது.
D) செயற்கையாக உருவாகும் மாசினைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ANSWER: D
24) முல்லைப்பாட்டு _____ நூல் வகையைச் சார்ந்தது.
A) பதினெண் கீழ்க்கணக்கு
B) எட்டுத்தொகை
C) பத்துப்பாட்டு
D) சிற்றிலக்கியம்
ANSWER: C
25) கீழுள்ளவற்றில் முல்லைத்திணைக்குரிய மரங்களில் பொருந்தாத ஒன்று _____
A) தேக்கு
B) குருந்தம்
C) காயா
D) கொன்றை
ANSWER: A
26) முல்லைப்பாட்டின் பா வகை _____ ஆகும்.
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா
ANSWER: B
27) மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை நமக்கு படம் பிடித்துக் காட்டுவது ______
A) சங்க இலக்கியம்
B) திருக்குறள்
C) இலக்கணம்
D) நாலடியார்
ANSWER: A
28) முல்லை நிலத்திற்குரிய உரிப்பொருள் ______
A) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
B) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
C) ஊடலும் ஊடல் நிமித்தமும்
D) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
ANSWER: B
29) முதுபெண்டிர் எனும் சொல் யாரைக் குறிக்கிறது ?
A) முதிய பெண்
B) இளம் பெண்
C) தலைவன்
D) போராளி
ANSWER: A
30) மண்ணுக்கும் விண்ணுக்குமாக பேருருவம் எடுத்து நின்றவர் _____
A) தலைவர்
B) பகைவர்
C) திருமால்
D) முதுபெண்டிர்
ANSWER: C
TNPSC Tamil MCQ Questions and Answers:
31) “தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே” – மேற்காணும் கூற்று யாருடையது?
A) இடையர்
B) முதுபெண்டிகர்
C) திருமால்
D) தோழி
ANSWER: B
32) சிறு தாம்புக் கயிற்றினால் கட்டப்பட்ட இளங்கன்று வருந்தியதன் காரணம் ____
A) தாயின் பிரிவால்
B) பசியின் வாட்டத்தால்
C) தன்னைக் கட்டிப் போட்டதினால்
D) வண்டுகள் ஆர்ப்பரிப்பதினால்
ANSWER: B
33) “நாழி கொண்ட, நறுவீ முல்லை” – இதில் பயின்று வந்துள்ளது __________
A) மோனை
B) எதுகை
C) இயைபு
D) முரண்
ANSWER: A
34) உரிச்சொல் தொடர் பயின்று வந்துள்ள சொல்லைத் தேர்வு செய்க.
A) திருமால்
B) பேருருவம்
C) பெண்டிர்
D) நன்மொழி
ANSWER: B
35) விரிச்சியை வலியுறுத்தும் வகையில் ஒரு பெண் மேற்கொள்ளப்படுவதைப் பின்வரும் தொடர்கள் விளக்குகின்றன. அவற்றுள் பொருந்தாததைத் தேர்க.
A) ஐயம் கொண்ட மக்கள் ஊர் காவல் தெய்வத்திடம் செல்லுதல்.
B) தன் பிராத்தனையை இறைவன் நிறைவேற்றுவாறென தெய்வத்தைத் தொழுது நிற்றல்.
C) அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கவனித்தல்.
D) அயலார் பேசும் பாங்கிற்கு இணையாக அச்செயல் நடக்கும் என எண்ணுதல்.
ANSWER: A
36) பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ – இவ்வரி நமக்கு உணர்த்தும் கருத்து _____________
A) கடல்நீர் ஆவியாகி பனியை உறைவிக்கிறது
B) பனியானது உறைந்து கடல்நீருடன் கலக்குகிறது
C) கடல்நீர் ஆவியாகி மேகத்தைக் குளிர்விக்கிறது
D) பனியானது கடலில் பெருகி கடலை குளிர்விக்கிறது
ANSWER: C
37) கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் இலக்கணக்குறிப்பை அறிந்து அதில் பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்க.
A) அருங்கடி
B) பெருமுதுபெண்டிர்
C) சிறுபுன்
D) திருமால்
ANSWER: D
38) இடைமகள் இளங்கன்றிற்குக் கூறிய ஆறுதலாக நாம் பாடபகுதியில் அறிவது ______________
A) புல்லை மேய்ந்து உன் தாய்மாரை எம் இடையர் ஓட்டி வந்துவிடுவார், நீ வருந்தாதே
B) உன் மீது அன்பு காட்டுவதற்கும் உன் பசிப்பிணியைப் போக்குவதற்கும் உனது தயார் வந்துவிடுவார்.
C) வருத்துடன் இருக்கும் உன் தாயார் விரைவில் வந்துவிடுவார், நீ வருந்தாதே
D) காணாமல் போன உன் தாயாரை முதுபெண்டிர் கண்டுபிடித்து விடுவார், நீ கலங்காதே.
ANSWER: A
39) “கொண்ட” – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கணம் முறையே ______
A) பகுதி, விகாரம், நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி
B) பகுதி, சந்தி, விகாரம், நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி
C) பகுதி, விகாரம், இறந்தகால இடைநிலை, பெயரெச்ச விகுதி
D) பகுதி, சந்தி, விகாரம், இறந்தகால இடைநிலை, பெயரெச்ச விகுதி
ANSWER: C
40) “நிமித்தம்” என்பது பின்னர் நிகழும் நன்மை தீமைகளை முன்னரே அறிவிக்கும் “குறி” என்பர். முல்லைப் பாட்டில் விரிச்சி கேட்டலைப் போன்றே சங்க கால மக்கள் பல்வேறு விதமான நிமித்தங்களைப் பின்பற்றியும் நம்பிக்கைக் கொண்டும் இருந்துள்ளனர். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A) இரவலர் பரிசில் பெறாத போது, தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசாமல் தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பர்.
B) காரியென்னும் பறவை கத்தினாலும் அல்லது உட்புகுந்தாலும் தீய நிமித்தம் என்று கருதினர்.
C) காக்கை கரைந்தால் விருந்து வரும் என்று எண்ணுகின்ற நன்னிமித்த வழக்கம் சங்க கால மக்களிடமும் இருந்தது.
D) பனை மரம் நன்கு தழைத்திருந்தால் நன்மையும், வாடியிருந்தால் தீமையும் நிகழப்போவதாக கருதினர்.
ANSWER: D
TNPSC Tamil MCQ Questions and Answers:
41) முல்லைப்பாட்டின் மூலம் சங்க கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது. சங்க கால மக்களின் வாழ்க்கை முறைக்கும் தற்காலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்க.
கல்வி: சங்க கால மக்கள் – பாடம் கற்பிப்பவரை கணக்காயர் என்று அழைத்தனர். தற்போதுள்ள மக்கள் – பாடம் கற்பிப்பவரை ஆசிரியர் என்று அழைக்கின்றனர்.
விளையாட்டு: சங்க கால மக்கள் – குழந்தைகள் தெருக்களில் மணல் வீடு கட்டி விளையாடினர். தற்போதுள்ள மக்கள் – குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே கட்டுமானவியல் கட்டடக் கண்டங்களை (Building blocks) வைத்து விளையாடுகின்றனர்.
உணவு: சங்க கால மக்கள் – எப்போதும் அரிசி உணவையே தங்கள் உணவாகக் கொண்டனர். தற்போதுள்ள மக்கள் – எப்போதாவது தான் அரிசி உணவைத் தங்கள் உணவாகக் கொள்கின்றனர்.
A) கல்வி மற்றும் விளையாட்டு சரி
B) கல்வி மற்றும் உணவு சரி
C) கல்வி மற்றும் விளையாட்டு தவறு
D) கல்வி மற்றும் உணவு தவறு
ANSWER: A
42) சங்க கால மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை நாம் எதற்கு தெரிந்துக் கொள்ள வேண்டும்?
A) நம் முன்னோர்களின் சிறப்பைப் பெருமிதம் பேசிக் கொள்வதற்காக
B) நம் வாழ்க்கையை அறம் சார்ந்து இனிதே வாழ வேண்டும் என்பதற்காக
C) சங்க காலங்களில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை எடுத்துரைப்பதற்காக
D) நம் வாழ்வில் வரும் தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதற்காக
ANSWER: B
43) மழையின் சீற்றத்தினால் நம் இயல்பு வாழ்வில் ஏற்படக் கூடிய மாற்றங்களில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A) மழைக்காலங்களில் தெருவோரங்களில் வியாபாரம் செய்யக்கூடிய சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
B) மழைக்காலங்களில் பயணம் மேற்கொள்பவர்களின் பயணங்களில் தாமதங்கள் ஏற்படுகின்றன.
C) மழைக்காலங்களில் தெருக்களில் தேங்கும் மழை நீரால் அங்கு இருக்கும் மக்களுக்கு சிரமங்கள் உண்டாகின்றன.
D) மழைக்காலங்களில் பருவ மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
ANSWER: D
44) முல்லைப் பாட்டில் காணலாகும் உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
அ) நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
ஆ) நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
இ) கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
ஈ) யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
A) அ மற்றும் ஆ
B) அ மற்றும் இ
C) ஆ மற்றும் இ
D) ஆ மற்றும் ஈ
ANSWER: D
45) சங்க இலக்கியங்களில் முல்லைப்பாட்டு நமக்கு எதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது என்ற கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்க. கருத்து 1: பண்டைக்கால மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.
கருத்து 2: சங்க காலமக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கின்றன.
கருத்து 3: மக்களின் அகம், புறம் ஆகிய வாழ்க்கை நெறிகளை விளக்குகிற அகநூலாகவும் புற நூலாகவும் விளங்குகின்றன.
A) கருத்து 1 மற்றும் கருத்து 2 சரி
B) கருத்து 1 மற்றும் கருத்து 3 சரி
C) கருத்து 1 மற்றும் கருத்து 3 தவறு
D) கருத்து 1 மற்றும் கருத்து 2 தவறு
ANSWER: A
46) முல்லைத்திணைப் பாடலுக்குத் தொல்காப்பியம் வகுக்கும் இலக்கணத்தைக் கொண்டு முல்லைப்பாட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு காட்சிகளைக் கொண்ட ஒரு ஓரங்க நாடகம் போல் முல்லைப்பாட்டு அமைந்திருக்கிறது. அந்த நான்கு காட்சிகளை வரிசைப்படுத்துக.
1) தலைவன் வெற்றி பெற்று முல்லைக்காட்டின் வழியே விரைந்து வருதல்
2) தலைவனின் பிரிவைப் பொறுத்துக் கொள்ள முயற்சி செய்தல் மற்றும் அதனால் ஏற்படும் துன்பங்கள்
3) பாசறை அமைப்பு மற்றும் தலைவனின் மனநிலை
4) தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் மனநிலை
A) 4 1 2 3
B) 4 3 2 1
C) 2 4 3 1
D) 2 3 4 1
ANSWER: B
47) முல்லை நில மக்களின் சிறப்புகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A) எருமைக் கொம்பை வழிபடல்
B) மூவினம் வளர்த்தல்
C) மகளிர் பங்கேற்றல்
D) வரைவு கடாவுதல்
ANSWER: D
48) முல்லைப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாடலின் வரிகளுக்கேற்ப கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
A) மழைப்பொழிவு, தலைவியை ஆற்றுதல், தெய்வத்தை வணங்குதல், விரிச்சி கேட்டல்
B) மழைப்பொழிவு, தெய்வத்தை வணங்குதல், விரிச்சி கேட்டல், தலைவியை ஆற்றுதல்
C) மழைப்பொழிவு, விரிச்சி கேட்டல், தெய்வத்தை வணங்குதல், தலைவியை ஆற்றுதல்
D) மழைப்பொழிவு, தெய்வத்தை வணங்குதல், தலைவியை ஆற்றுதல், விரிச்சி கேட்டல்.
ANSWER: B
49) சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
B) மாகாகவி சுப்ரமணிய பாரதி
C) கவிஞர் கண்ணதாசன்
D) புரட்சிக் கவி பாரதிதாசனார்
ANSWER: B
50) உரைநடையும் கவிதையும் கலந்த வடிவம் _________ எனப்படுகிறது.
A) வசன கவிதை
B) ஹைகூ கவிதை
C) கவிதை உரை
D) விளக்க உரை
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
51) _____________ இன்றி அமையாது உலக உயிரியக்கம்.
A) நிலம்
B) நீர்
C) காற்று
D) நெருப்பு
ANSWER: C
52) பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் _________
A) இந்தியா
B) தினத்தந்தி
C) தினமலர்
D) இந்தியா டுடே
ANSWER: A
53) காற்றை ________ வீசுமாறு பணிக்கிறார் பாரதியார்
A) குளிராக
B) வெப்பமாக
C) வேகமாக
D) சீராக
ANSWER: D
54) பாரதியாரின் பன்முகத் தோற்றத்தைக் கூறும் சொற்குழுவுள் பொருந்தாததைத் தேர்க இதழாளர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், பாடகர், கவிஞர்
A) இதழாளர்
B) பாடகர்
C) கட்டுரையாளர்
D) சிறுகதை ஆசிரியர்
ANSWER: B
55) “சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே” –எதனை அவித்துவிடாதே என்கிறார் பாரதியார்?
A) உயிரை
B) நெருப்பை
C) உணவினை
D) உடலை
ANSWER: A
56) இலைகள் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து வரும் காற்றை ________ என்று கூறுவர்
A) மென்காற்று
B) வன்காற்று
C) தென்றல்காற்று
D) சுழற்காற்று
ANSWER: C
57) இனிய வாசனைக்காக காற்றை எதனைச் சுமந்து வரச் சொல்கிறார்?
A) நறும் புகையைச் சுமந்து வரச் சொல்கிறார்
B) மகரந்தத்துகளைச் சுமந்து வரச் சொல்கிறார்
C) புழுதியைச் சுமந்து வரச் சொல்கிறார்
D) மழையைச் சுமந்து வரச் சொல்கிறார்
ANSWER: B
58) காற்றே வா! என்பதன் இலக்கணக்குறிப்பு _______
A) நான்காம் வேற்றுமை
B) இரண்டாம் வேற்றுமை
C) முதல் வேற்றுமை
D) எட்டாம் வேற்றுமை
ANSWER: D
59) தூசி, குழலோசை, மல்லிகை, புழுதி இவற்றைச் சுமந்து வரும் காற்றை உணரும் நம் புலன்கள் முறையே,
A) மூக்கு, உடல், கண், காது
B) கண், காது, மூக்கு, உடல்
C) உடல், கண், காது, மூக்கு
D) காது, கண், மூக்கு, உடல்
ANSWER: B
60) மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்கா லம் நின்று வீசிக் கொண்டிரு” என்று காற்றிடம் பாரதியார் கூறியதன் பொருள் _______
A) நீண்ட ஆயுளைப் பெறவேண்டும்.
B) நீண்ட காலத்திற்கு இருக்கவேண்டும்
C) நீண்ட நேரத்திற்கு நிற்க வேண்டும்.
D) நீண்ட நாட்களுக்கு வீசவேண்டும்.
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
61) வடகிழக்குப் பருவக் காற்று என்னும் போது காற்று _______ நகரும் திசையைக்குறிக்கிறது.
A) வட கிழக்கு நோக்கி
B) வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி
C) வட கிழக்கிலிருந்து
D) கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி
ANSWER: C
62) ‘நின்று‘ என்பதன் சரியான பகுபதப் பிரிப்பு எது?
A) நின் + று
B) நில் (ன்) + று
C) நின்் + ற் + உ
D) நில் (ன்) + ற் + உ
ANSWER: D
63) ‘ஆடிப் பட்டம் தேடி விதை‘ என்ற பழமொழியால் உணரப்படும் கருத்து
A) ஆடிமாதத்தில்தான் அதிக விதைகள் கிடைக்கும்
B) ஆடிமாதத்தில் காற்று அதிகமாக இருக்கும்.
C) ஆடி மாதத்தில் விதைத்தால் அதிக விளைச்சல் தரும்.
D) ஆடி மாதத்தில் மழைபொழிவு அதிகமாகும்
ANSWER: B
64) செய்தி 1: கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது.
செய்தி 2: இத்தாலியில் சிசிலி நகரத்தையொட்டி இருக்கும் வனப்பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டது.
செய்தி 3: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐடா புயல் தாக்கியது. அமெரிக்க கண்டத்தை தாக்கிய மிகப்பெரிய புயல்களுள் ஒன்றான இந்தப் புயலுக்கு சுமார் 45 பேர் வரை இறந்தனர்.
செய்தி 4: வெள்ளப்பெருக்கு இவற்றுள் காற்றின் பங்கு இல்லாத இயற்கைச் சீற்றம் எது?
A) இத்தாலியில் ஏற்பட்ட காட்டுத் தீ
B) கனடாவில் ஏற்பட்ட வெப்ப அலை
C) துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம்
D) அமெரிக்காவைத் தாக்கிய புயல்
ANSWER: C
65) நெடுங்காலம்‘ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைத் தேர்க.
A) ஈறுபோதல், முன்னின்ற மெய் திரிதல்
B) ஈறுபோதல், அடிஅகரம் ஐ ஆதல்
C) ஈறுபோதல், இடைஉகரம் இயாதல்
D) ஈறுபோதல், இனமிகல்
ANSWER: D
66) கொரோனா பாதிப்பு மிகுந்த காலகட்டத்தில் வீட்டிற்குள் முடங்கி இருந்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது உயிர்வளியைப் பெறும் வழிமுறைகள். அவை
1) வீட்டிற்குள் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமரந்து உடற்பயிற்சி செய்தல்.
2) காலையும் மாலையும் மரங்களடர்ந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல் . 3) தினமும் இருவேளையும் மூச்சுப் பயிற்சியின் மூலம் நுரையீரலைப் பலப்படுத்துதல்.
4) அவசர உதவிக்கென ஆக்ஸிஜன் உருளைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல். இவ்வழிமுறைகளுள் ஒன்று கடைபிடிக்க இயலாததாக இருந்திருக்கும் என்றால் அது எது?
A) வீட்டிற்குள் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து உடற்பயிற்சி செய்தல்.
B) காலையும் மாலையும் மரங்களடர்ந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல்.
C) அவசர உதவிக்கென ஆக்ஸிஜன் உருளைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல்.
D) தினமும் இருவேளையும் மூச்சுப் பயிற்சியின் மூலம் நுரையீரலைப் பலப்படுத்துதல்.
ANSWER: B
67) சொல்கின்ற பேச்சைக் கேட்காமலும் யாருக்கும் அடங்காமலும் அதிமாகக் குறும்பு செய்த கண்ணனை அவன் தாய் ஓரிடத்தில் கையைக் கட்டிக்கொண்டு உட்காரச் சொன்னார். பின்பு மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும் போதும் 5 எண் வரை எண்ணச் சொன்னார். சற்று நேரம் கழித்து கண்ணன் மிகவும் அமைதியாகி மென்மையாக தன் தாயைப் பார்த்துச் சிரித்தான். அதே பயிற்சியைப் படிக்க உட்காருவதற்கு முன்பும் படித்து முடித்த பின்பும் செய்யச் சொன்னார் . ஏனென்றால், இத்தகைய பயிற்சி,
1) அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மிகச் சரியான தண்டனை. அப்பொழுதுதான் அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கலாம்.
2) இரத்த அழுத்தத்தை, நீரிழிவு நோயை, மூச்சிரப்பை, மனப்பிறழ்வை, தொடரும் தீராத வலிகளை எதிர்த்து செயல்பட உதவுகிறது
3) உணர்ந்து மேற்கொள்ளப்படும் சுவாசம் உடற்கூற்றின் நிலையை, செயலை செம்மைப்படுத்தி சீராக்குகிறது.
4) கற்கும் ஆற்றலும், நினைவும் பெருகுகின்றன.கவலைகளையும், மன அழுத்தத்தையும் போக்கும் அருமருந்து இது.
A) கருத்துகள் 1, 3, 4, பொருந்தமுடையன , 2 மட்டும் பொருந்தாது.
B) கருத்துகள் 1, 2, 3, பொருந்தமுடையன , 4 மட்டும் பொருந்தாது.
C) கருத்துகள் 2, 3, 4, பொருந்தமுடையன , 1 மட்டும் பொருந்தாது.
D) கருத்துகள் 1, 2, 4, பொருந்தமுடையன , 3 மட்டும் பொருந்தாது.
ANSWER: C
68) எழுத்துகளின் ஒலிவடிவத்திற்கு இலக்கணம் கூறுகையில், ”உந்தி முதலா முந்து வளி தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,”- என்கிறார் தொல்காப்பியர் இந்நூற்பா நமக்கு உணர்த்துவது,
A) உந்தியிலிருந்து எழும்பும் ஒலி தானாகவே தலையை அடையும்போது மொழி உருவாகிறது
B) மொழிக்கு அடிப்படையாக உந்தி மிடறுடன் இணைவதைக் குறிக்கின்றது.
C) மொழிக்கு அடிப்படையாக உந்தியும் தலையும் மட்டுமே இருக்கிறன
D) மொழிக்கு அடிப்படையாக காற்றின் பங்கு முதன்மையாக இருக்கிறது
ANSWER: D
69) காற்று மாசுபாட்டின் விளைவுகள்,
1) வாகனங்கள் வெளியேற்றும் கந்தகப் புகை, அனல் மின் நிலையம் வெளியேற்றும் நிலக்கரிப் புகை, ரசாயன ஆலைகள் வெளியேற்றும் அமிலம் கலந்த நச்சுப் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது
2) எரிபொருட்களை எரிப்பதால் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் வளிமண்டலத்தில் இணைந்து அமில மழையை ஏற்படுத்துகிறது.
3) காற்று மாசுபாட்டின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று காலநிலை மாற்றம், குறிப்பாக புவி வெப்பமடைகிறது.
4) காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி மழைபொழிவு ஏற்படுகிறது . அதனால் பருவம் அல்லாத காலத்திலும் நன்கு பயிர்களை விளைவிக்க முடிகிறது.
காற்று மாசுபாட்டின் விளைவுகளில் பொருந்தாதது எதுவெனத் தேர்க.
A) எரிபொருட்களை எரிப்பதால் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் வளிமண்டலத்தில் இணைந்து அமில மழையை ஏற்படுத்துகிறது.
B) காலநிலை மாற்றத்தால் பெய்யும் பருவம் தவறிய மழைபொழிவால் எல்லாக் காலத்திலும் நன்கு பயிர்களை விளைவிக்க முடிகிறது.
C) காற்று மாசுபாட்டின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று காலநிலை மாற்றம், குறிப்பாக புவி வெப்பமடைகிறது.
D) வாகனங்கள் வெளியேற்றும் கந்தகப் புகை, அனல் மின் நிலையம் வெளியேற்றும் நிலக்கரிப் புகை, ரசாயன ஆலைகள் வெளியேற்றும் அமிலம் கலந்த நச்சுப் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது
ANSWER: B
70) செய்தி : ”புயல் மையம் கொண்டதிலிருந்து அதி தீவிர புயலாக மாறுவது வரையிலான மாற்றங்களை மக்களுக்கு அறிவிக்க இந்த புயல்கூண்டு ஏற்றும் முறை பின்பற்றப்படுகிறது. மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை.” புயலின் மாற்றங்களைக் கணக்கிடும் முறைகளாவன,
1) புயல் கண்காணிப்பானது வானில் காணப்படும் மேகங்களின் திரட்சியைப் பொறுத்தும் அதன் நகரும் தீவிரத்தைப் பொறுத்தும் செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களால் உணரப்படுகிறது.
2) டாப்ளர் ரேடார்கள் (Doppler Radars) புயலுடன் கூடிய மழையளவைக் கணக்கிட்டு, எங்கு சூறாவளியோடு கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என்பதைக் கணிக்கிறது.
3) வானிலை வல்லுநர்கள் காற்றின் திசையை அளவிட காற்றுமானி அல்லது காற்று திசைக்காட்டி என்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். காற்றின் வேகத்தை அளக்க அனிமாமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
4) திருக்கணிதப் பஞ்சாங்கங்கள் மூலம் கணிக்கப்பட்டுள்ள புயல் மழைப் பற்றிய செய்திகளின் அடிப்படையில் புயல் பாதிக்கும் இடங்களையும், காற்றின் வேகத்தையும் மிகத் துல்லியமாகக் கணக்கிடுகின்றனர்.
இவற்றுள் தவறான கருத்தாக எதனைக் கூறலாம்
A) 1, 2 , 3 சரியானவை, 4 மட்டும் தவறானது
B) 2 , 3 , 4சரியானவை, 1 மட்டும் தவறானது
C) 1, 2 , 4 சரியானவை, 3 மட்டும் தவறானது
D) 1, 3, 4 சரியானவை, 2 மட்டும் தவறானது
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
71) புதுக் கவிதைகளில் யாப்பிலக்கணம் என்பது,
1) யாப்பிலக்கண்ம என்ற ஒன்று இல்லாமல்தான் உரைநடையும் கவிதையும் இணைந்து இயற்றப்படும் புதுக்கவிதை இருக்க வேண்டும்.
2) உணர்ச்சி பொங்கக் கவிதைப் படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதனால்தான் புதுக்கவிதை என்ற ஒன்றே பிறந்தது.
3) ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது
4) யாப்பிலக்கணத்தின் கட்டுக்குள் அடங்காத பாரதியாரின் வசன கவிதையே, புதுக்கவிதை’ என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று. இக்கருத்துகளின் பொருத்தப்பாட்டினை ஆய்க
A) கருத்துகள் 1, 3, 4, பொருந்தமுடையன , 2 மட்டும் பொருந்தாது.
B) கருத்துகள் 1, 2, 3, பொருந்தமுடையன , 4 மட்டும் பொருந்தாது.
C) கருத்துகள் 2, 3, 4, பொருந்தமுடையன , 1 மட்டும் பொருந்தாது.
D) கருத்துகள் 1, 2, 4, பொருந்தமுடையன , 3 மட்டும் பொருந்தாது.
ANSWER: C
72) சூரியன், காற்று, மழை நாடு முதலானவைகளைத் தெய்வமாகக் கருதி வழிபடும் முறை இருந்ததை இலக்கியங்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. கீழ்வருவனவற்றுள் பொருந்தாத கவிஞரும் கவிதை வரியும் எது எனத் தேர்க
A) காற்றே, வா. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம். – பாரதியார்
B) எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிந்நாடே – இதை வந்தனை கூறி மனதி லிருத்தியென் வாயுற வாழ்த்தேனோ – கண்ணதாசன்
C) ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! – காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்.” – இளங்கோவடிகள்
D) மழையே மழையே வா வா — நல்ல வானப்புனலே வா வா! –இவ் வையத்தமுதே வாவா! தழையா வாழ்வும் தழைக்கவும் — மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் உழுவாரெல்லாம் மலைபோல் எருதை ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே… – பாரதிதாசன்
ANSWER: B
73) ”புயலில் ஒரு தோணி” என்ற கதை ஒரு ________.
A) சிறுகதை
B) புதினம்
C) காப்பியம்
D) கட்டுரை
ANSWER: B
74) ப. சிங்காரம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக____________.
A) பாடுபட்டார்
B) சிலரை எதிர்த்தார்
C) தன் சேமிப்பைக் கொடுத்தார்
D) தன் வாழ்நாளைக் கழித்தார்
ANSWER: C
75) புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை ______ஆண்டில் தொடங்கியது.
A) 2000
B) 2001
C) 2004
D) 2005
ANSWER: A
76) மாரி என்பதன் பொருள் _____ ஐ குறிக்கிறது.
A) புயல்
B) மழை
C) காற்று
D) இடி
ANSWER: B
77) _________ உள்ள வானிலை ஆய்வு மையம் புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டது.
A) சென்னையில்
B) வேலூரில்
C) புதுதில்லியில்
D) மும்பையில்
ANSWER: C
78) கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அடுக்குத்தொடரில் ஓசை எழுப்பாத ஒன்றைத் தேர்வு செய்க.
A) இடி முழக்கம்
B) மழைப் பொழிவு
C) சூரிய வெளிச்சம்
D) தோணி உடைதல்
ANSWER: C
79) இயற்கை சீற்றதிற்குப் பிறகு அவர்கள் சென்ற இடம்_______.
A) பிலவான்
B) பினாங்கு
C) மலாய்
D) மஸ்தா
ANSWER: B
80) தோணியில் வந்த பயணிகள் ________ கழித்து அவுலியா மீன் வகைகளையும் நீரில் நீந்திக் கொண்டிருக்கும் எருமைகளையும் கண்டனர்.
A) ஒரு பகல்
B) இரண்டு பகல்
C) மூன்று பகல்
D) நான்குப் பகல்
ANSWER: B
TNPSC Tamil MCQ Questions and Answers:
81) தோணியில் உள்ள பலகைகளுக்கிடையில் மாட்டிக் கொண்டவர்________.
A) பாண்டியன்
B) கப்பித்தான்
C) ப.சிங்காரம்
D) பாண்டி
ANSWER: B
82) கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் போது, ஒன்று போல் இணைந்துத் தோற்றமளித்தவை எவையெவை ?
A) தோணியும் நீரும் மற்றும் இடியும் மேகமும்
B) வானும் கடலும் மற்றும் மழையும் வளியும்
C) இடியும் மேகமும் மற்றும் மழையும் வளியும்
D) தோணியும் நீரும் மற்றும் வானும் கடலும்
ANSWER: B
83) தோணியினைச் செலுத்தியவர் யார்?
A) பாண்டியன்
B) கப்பித்தான்
C) ப.சிங்காரம்
D) பாண்டி
ANSWER: B
84) கொடுக்கப்பட்டுள்ளக் கூற்றினை ஆராய்க
கூற்று 1: தொடர்ச்சியாக நிகழும் காற்றின் போக்கை புவி தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சூழலகையில் மாற்றும்.
கூற்று 2: நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும். தெற்குப்பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும்.
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 1, 2 சரி
D) கூற்று 1, 2 தவறு
ANSWER: B
85) கடல் சீற்றத்தின் போது அதில் இருந்தவர்கள் எங்கு சென்று ஒழிந்துக் கொண்டனர்.
A) தோணியில் இருந்த துணைப் படகில்
B) தோணிக்கு அடியில் இருந்த ஒரு அறையில்
C) தோணியில் வைதிருந்த மூட்டைகளுக்கு அருகில்
D) தோணியில் ஆங்காங்கே உள்ள மூலைகளில்
ANSWER: D
86) கொடுக்கப்பட்டுள்ளக் கூற்றினை ஆராய்க
கூற்று 1: கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு கரையினை அடைந்தனர்.
கூற்று 2: கடல் சீற்றதிற்குப் பிறகு கடலைப் பார்த்தபடி மலைத்து நின்றார் கடற்கூத்தின் ஆசிரியர்.
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 1, 2 சரி
D) கூற்று 1, 2 தவறு
ANSWER: A
87) ஒரு ஊரில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் அவ்வூரில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் உங்களின் முதல் உதவி என்னவாக இருக்க வேண்டும் என்பதில் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
A) அங்கு உள்ளவர்களுக்கு உணவினை ஏற்பாடு செய்துக் கொடுத்தல்
B) அவர்கள் தங்குவாதற்காக இடங்களை ஏற்பாடு செய்து தருதல்
C) அவர்களின் பாதிக்கப்பட்ட பொருட்களைச் சரி செய்தல்
D) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மருந்தளித்தல்
ANSWER: C
88) உங்கள் பள்ளியில் அனைவரும் சேர்ந்து ஒரு காட்டுப்பகுதிக்குச் சுற்றுலா செல்கிறீர்கள். அத்தருணத்தில் சூறாவளி உண்டாகிறது. அத்தகையத் தருணத்தில் நம் பாதுகாபிற்காக நாம் மறைந்துக்கொள்ள சரியான இடம் எதுவெனக் குறிப்பிடுக.
A) இருக்கும் இடத்திலேயே அசையாமல் நிற்றல்
B) மரங்கள் இல்லாமல் உள்ள திறந்த வெளிக்குச் செல்லுதல்
C) அங்குள்ள ஒரு வாகனத்தின் உள்ளே பதுங்கி இருத்தல்
D) தாழ்வான பகுதிக்குச் சென்று மறைந்துக் கொள்ளுதல்
ANSWER: D
89) நீங்கள், உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இடியுடன் கூடிய பலத்த மழைப் பொழிகிறது. அப்போது நீங்கள் என்ன செய்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதைப் பின்வரும் தொடர்கள் எடுத்துறைகின்றன. அவற்றுள் தவறான ஒன்றினைத் தேர்வு செய்க
A) மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
B) வெளியிலிருந்து வீட்டிற்குள் சென்றுப் பதுங்கி இருத்தல்
C) ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவைத்தல்
D) வெளியில் இருக்கும் பெரிய மரத்தடியில் நிற்றல்
ANSWER: D
90) ஒரு ஊரில் திடீரென பூகம்பம் ஏற்படுகிறது அப்போது அங்குள்ளவர்களில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த முயற்சியினை மேற்கொண்டு தப்பிக்க முற்படுகின்றனர்.
1) ஒருவர் அங்குள்ள மின்தூக்கினைப் பயன்படுத்தி உயரம் குறைவான இடத்திற்குச் செல்கிறார்.
2) ஒருவர் வெளியில் இருந்து ஒரு அறைக்குள் சென்று அறையினைப் பூட்டிக் கொள்கிறார்.
3) வெளியில் நின்றுக் கொண்டிருக்கும் ஒருவர் அதே இடத்தில் அசையாமல் முட்டியிட்டு அமர்ந்துக் கொள்கிறார்.
4) ஒருவர் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளியில் செல்ல முடியற்சிக்கிறார்.
இந்நான்கு நபர் செய்த செயல்களையும் ஆராய்ந்து, இவர்களில் யார் செய்தது சரி என்பதைத் தேர்ந்தெடுக்க.
A) தொடர் – 1 இல் குறிப்பிட்டுள்ள நபர்
B) தொடர் – 2 இல் குறிப்பிட்டுள்ள நபர்
C) தொடர் – 3 இல் குறிப்பிட்டுள்ள நபர்
D) தொடர் – 4 இல் குறிப்பிட்டுள்ள நபர்
ANSWER: D
TNPSC Tamil MCQ Questions and Answers:
91) வெள்ளத்தால் பாதிக்கபடக்கூடும் என்று உங்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கின்றனர். அத்தகையத் தருணத்தில் நீங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதில் சரியான ஒன்றைக் குறிப்பிடுக.
A) வீடுகளில் தண்ணீர் நுழையாதவாறு தடுப்புகளை உருவாக்குதல்
B) வீட்டில் உள்ள பொருள்களை உயரமான இடத்தில் வைத்தல்
C) உணவு மற்றும் தண்ணீர் போன்ற அவசரகாலப் பெட்டியை உருவாக்குதல்
D) வெள்ளம் உள்நுழையாதவாறு ஊரைச் சுற்றி தடுப்புகளை அமைத்தல்
ANSWER: C
92) புயலின் போது நாம் எதிர்கொள்ளும் சீற்றங்களை அறிந்து அதில் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
A) அதிக எண்ணிக்கையிலான உயிர் மற்றும் பொருள் சேதங்களை விளைவிக்கும்.
B) கடல் மட்டம் உயர்வதன் மூலம் அங்குள்ள வீடுகள் பாதிப்படைகின்றது.
C) புயல் சூழ்ந்துள்ள நிலப்பகுதியை புயலானது நிரந்தரமாக ஆகிரமித்துகுக் கொள்ளும்.
D) மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சேதமடைவதால் நாம் பாதிக்கப்படுவோம்.
ANSWER: C
93) கடல்களில் மேகச்சுருள் ஏற்படுவதன் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அவற்றுள் தவறான காரணத்தையுடைய கூற்றைக் குறிப்பிடுக.
கூற்று 1: பூமியின் நிலநடுக்கோட்டு பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் ஆவியாகும் நீர் கடலின் மேற்பரப்பில் உள்ளக் காற்றுடன் கலக்கிறது.இந்த சூடானக் காற்று செங்குத்தாக நேர்மேல் நோக்கிச் செல்கிறது.
கூற்று 2: காற்று சூடாகி மேலே செல்வதால் அந்த வளிமண்டலப் பகுதியில் காற்று அழுத்தம் அதிகமாகிறது. அதிகமாகும் இந்த அழுத்தத்தை இன்னும் அழுத்தமாக்க சுற்றுப்புறப் பகுதியில் உள்ள காற்று இணைகிறது.
கூற்று 3: மேலே சென்று தங்கும் காற்று சூடான ஈரக்காற்று ,குளிர்ந்த நீரத்திவலைகளை உறைந்த மேகமாக்குகிறது.பிறகு இந்த மேகமானது காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
கூற்று 4: இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று காற்றின் காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அது மேகச்சுருளை ஏற்படுத்துகிறது.
A) கூற்று 1 தவறு
B) கூற்று 2 தவறு
C) கூற்று 3 தவறு
D) கூற்று 4 தவறு
ANSWER: B
94) தமிழ்நாடு அரசின் வெள்ளக் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
A) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்து மற்றும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதாற்காக.
B) வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக.
C) தமிழக அரசின் வருவாயையும் அந்த ஊரின் வருவாயையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக.
D) அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு சென்று வசிபதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதற்காக.
ANSWER: A
95) சில இடங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படைகின்றனர். அவ்வாறு வெள்ளத்தால் எளிதில் பாதிக்கப்படாதவாறு இருப்பதற்கும் வெள்ளத்தைத் தடுப்பதற்கும் பின்வரும் எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக.
A) அதிக மரங்களை நடுதல்மற்றும் மணல்
B) அணைகள் மற்றும் மதகுகள் கட்டுதல்
C) நீர் பயன்பாட்டினை அதிகரித்தல்
D) மூட்டையாலான சுவர்களைக் கட்டுதல்
ANSWER: B
96) வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன என்பதை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியானதைக் குறிப்பிடுக.
A) குறுகிய காலத்தில் ஏற்படும் அதிக மழைப் பொழிவு
B) பனி பிரதேசங்களில் உள்ள பணிகள் உருகுவதால்
C) கட்டப்பட்ட அணைகள் சேதமடைவதால்
D) நிலத்தடியில் நீர் மட்டம் அதிகம் உயர்வதனால்
ANSWER: D
97) எண்ணல், எடுத்தல், நீட்டல், முகத்தல் பெயர்களில் வருவது __________
A) பண்புத்தொகை
B) உம்மைத் தொகை
C) உவமைத் தொகை
D) அன்மொழித்தொகை
ANSWER: B
98) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் பொதுப்பெயருக்கும் சிறப்புப் பெயருக்கும் இடையில் _______ மறைந்து வரும்.
A) சொல்லுருபு
B) பண்புருபு
C) பெயருருபு
D) ஒட்டுருபு
ANSWER: B
99) வண்ணம், வடிவம், அளவு முதலான பெயர்ச்சொல்லின் உருபு மறைந்துவருவது ____________.
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) உவமைத்தொகை
D) வேற்றுமைத்தொகை
ANSWER: B
100) உவமைத் தொகையில் உவமிக்கப்படும் பொருள் ________ எனப்படும்.
A) உவமேயம்
B) உவமை
C) உவம உருபு
D) சொல்லுருபு
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
101) கீழ்வருவனவற்றுள் உம்மைத்தொகைச் சொல்லைத் தேர்க
A) இந்தியநாடு
B) ஆடுகளம்
C) புத்தகப்பை
D) உயிர்மெய்
ANSWER: D
102) பூங்குழல் வந்தாள், பொற்கொடி பேசினாள், மலரடி தொழுதேன், தேன்மொழி பாடினாள், உயிர்மெய் எழுத்துகள்” – இக்குழுவினுள் பொருந்தாத சொல்லைத் தேர்க.
A) தேன்மொழி பாடினாள்
B) மலரடி தொழுதேன்
C) பூங்குழல் வந்தாள்
D) பொற்கொடி பேசினாள்
ANSWER: B
103) புரைய, அனைய என்னும் உருபுகள் மறைந்து வருவது ________ தொகை
A) வேற்றுமைத் தொகை
B) புண்புத்தொகை
C) உவமைத் தொகை
D) வினைத்தொகை
ANSWER: C
104) அன்மொழித் தொகை என்றால் அல்லாத மொழி மறைந்து வருவது என்று பொருள்” இந்தக் கூற்றின்படி ‘அல்லாத மொழி‘ என்றால் _______
A) தொடருக்குள் அல்லாதது
B) உருபுக்குள் அல்லாதது
C) பொருளுக்குள் அல்லாதது
D) சொல்லுக்குள் அல்லாதது
ANSWER: A
105) செம்மொழியான தமிழ்மொழி, அது எங்கள் மொழி” – இத்தொடரில் இடம்பெற்றுள்ளவை முறையே, ______
A) பண்புத்தொகை, அன்மொழித்தொகை
B) பண்புத்தொகை, உம்மைத்தொகை
C) பண்புத் தொகை, உவமைத்தொகை
D) பண்புத் தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ANSWER: D
106) உவமைத்தொகை புறத்துப்பிறந்த அன்மொழித்தொகைக்குச் சான்றாகும் சொல் ______________ .
A) மலர்விழி பாடினாள்
B) வேற்கை வேந்தன்
C) பெரிய மீசை பேசினார்
D) பொன்மணி ஆடினாள்
ANSWER: A
107) உற்றாரும் உறவினரும் வந்து வாழ்த்த வேண்டுகிறேன்’ – இத்தொடரில் உற்றாரும் உறவினரும்’ என்பதைத் தொகைநிலைத் தொடராக மாற்றினால் எவ்வாறு வரும்?
A) உற்றார்உறவினர்
B) உற்றாராகிய உறவினர்
C) உற்றாரோடு உறவினர்
D) உற்றாருக்கு உறவினர்
ANSWER: A
108) அளவுப்பண்புத்தொகைச் சொல்லைக் கீழ்வரும் தொடரிலிருந்து தேர்வு செய்க . “முத்தமிழ் இலக்கிய விழாப் போட்டிகள் வெளிநாடு வாழ் மக்களால் நடத்தப்படுகின்றன”
A) இலக்கிய விழா
B) முத்தமிழ்
C) போட்டியில்
D) நடத்தப்படுகின்றன
ANSWER: B
109) மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றும் இறைவனின் வழிபாட்டில் இடம்பெறுவது சிறப்பு” இதனைத் தொகைச் சொல்லைப் பயன்படுத்தி எழுதினால் நமக்குக் கிடைக்கும் தொடரைத கீழ்வருவனவற்றிலிருந்து தேர்க.
A) மா, பலா, வாழை இறைவழிபாட்டில் இடம்பெறுவது சிறப்பு
B) முக்கனிகளும் இறைவழிபாட்டில் இடம்பெறுவது சிறப்பு
C) மா, பலா, வாழைப்பழங்கள் இறைவழிபாட்டில் இடம்பெறுவது சிறப்பு
D) முக்கனிகளும் இறைவனின் வழிபாட்டில் இடம்பெறுவது சிறப்பு
ANSWER: B
110) பேருந்தின் நெரிசலில் சிக்கி பேருந்தின் உள்ளே நகர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பதைக் கண்ட நடத்துநர், பேருந்தினுள் நின்ற பயணியர் கூட்டத்தின் நடுவே எம்பி எட்டிப் பார்த்து, ” இந்தாப்பா பச்சப்பை முன்னால போ!” என்று கத்தினார். இத்தொடரில் ”பச்சப்பை” என்பது,
A) பண்புத்தொகை
B) உவமைத் தொகை
C) அன்மொழித்தொகை
D) உம்மைத் தொகை
ANSWER: C
TNPSC Tamil MCQ Questions and Answers:
111) காரப்பொரியும் இனிப்பு முறுக்கும் வாங்கிட்டு வாங்க! பேரப்புள்ளைக்கு ரொம்பப் பிடிக்கும். ஊருக்குப் போகயில எடுத்துக்கிட்டுப் போகணும்” என்று வெளியில் கிளம்பிய முருகப்பனிடம் கூறினார் அவரது மனைவி கண்ணம்மா” – இத்தொடரில் காரப்பொரி, இனிப்பு முறுக்கு என்று சுவைப் பண்புத்தொகையை கண்ணம்மா பயன்படுத்தியிருப்பதிலிருந்து நாம் அறிய வருவது
1) இங்கு சுவைப் பண்புத்தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணத்தை முறையாகக் கற்றவர் கண்ணம்மா.
2) பேச்சுவழக்கிலும் இலக்கணங்கள் இயல்பாகவே பயன்படுத்தப்படுகின்றன.
3) பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு எதுவென்றாலும் இலக்கணம் என்பது ஒன்றுதான்.
4) இலக்கணப்பெயர்கள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இதுபோன்ற சொற்களின் பயன்பாடு பொருளைத் தெளிவாக உணர்த்துகின்றன. இவற்றுள் ஏற்புடையவை எவைஎவை?
A) ஏற்புடையவை 1, 2, 4
B) ஏற்புடையவை 1, 3, 4
C) ஏற்புடையவை 2, 3, 4
D) ஏற்புடையவை 1, 2, 3
ANSWER: C
112) “ஈறுபோதல்; இடை உகரம் இய்யாதல்;” என்னும் புணர்ச்சி விதிக்குப் பொருந்தும் தொகைச் சொற்களைத் தேர்க
A) முதுகுன்று, சிரிப்பொலி
B) சிறுகதை, பெரியன்
C) பசும்மஞ்சள், வரிவளை
D) நடுகல், பாசிலை
ANSWER: B
113) ஏழரை மணி ஆச்சு, இன்னும் ஸ்கூலுக்குக் கிளம்பலையா?” என்று அம்மா உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள். ” இதோ கிளம்பிட்டேம்மா! என்னோட ஒரடி ஸ்கேலத் தேடிக்கிட்டு இருக்கேன்” என்று பதில் கொடுத்தாள் மாலா. தாய்க்கும் மகளுக்குமான உரையாடலில் இடம் பெற்ற தொகைச சொற்கள், _____
A) முகத்தல் அளவை மற்றும் எண்ணல் அளவை உம்மைத் தொகைகள்
B) எடுத்தல் அளவை, மற்றும் நீட்டல் அளவை உம்மைத் தொகைகள்
C) எண்ணல் அளவை, மற்றும் எடுத்தல் அளவை உம்மைத் தொகைகள்
D) எண்ணல் அளவை, மற்றும் நீட்டல் அளவை உம்மைத் தொகைகள்
ANSWER: D
114) வாசலில் மாம்பழம் விற்றுக்கொண்டு வந்த பெரியவரைப் பாட்டி, ”இந்தாப்பா ! மாம்பழம், கொஞ்சம் நில்லு வரேன்” என்றுகூறி நிறுத்தினார். இலக்கணப்படி பாட்டி பயன்படுத்தியது ___________ தொகை.
A) உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
B) வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
C) வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
D) பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ANSWER: C
115) 1) காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி வரும்
2) தொடரில் இல்லாத ஒன்றை உணர்த்தி வரும்
3) சொல்லோடு தொடர்புடைய ஒன்றினைக் குறிக்கும்.
இம்மூன்று தொடர்களுக்கும் சான்றாய் உள்ள சொல் இடம் பெற்றுள்ள தொடரைத் தேர்க.
A) பைங்கூழ்க் களை எடுப்பது இன்றியமையாதது.
B) அடிக்கால் கட்டி அதிக வலியைத் தரும்
C) செய்யுளிலக்கத்தைக் கூறுவது தண்டியலங்காரம் என்னும் நூல்
D) தாழ்குழல் நடையழகைக் வியந்த பேசாதவரே இல்லை எனலாம்
ANSWER: D
116) ஈறுபோதல்; இடை உகரம் இய்யாதல் ; ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ; தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ; இனம்மிகல் இனையவும் ” என்னும் புணர்ச்சி விதி நமக்குச் சொல்வதுயாதெனின்,
1) பண்புப் பெயர் தொகையாக வரும்போது பல்வேறு மாற்றங்களை அடைகிறது
2) எழுத்திலக்கணத்தின்வழி பண்புப் பெயர்ப் புணர்ச்சி தனி விதிகளைப் பெறுகிறது.
3) ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஏற்ப அதன் வகைகளும் மாறுகின்றன.
4) மை யீற்றுப் புணர்ச்சி விதிகள் என்று இவை வழங்கப்படுகின்றன. இவற்றுள் தவறான விளக்கம் எது?
A) மை’ யீற்றுப் புணர்ச்சி விதிகள் என்று இவை வழங்கப்படுகின்றன.
B) ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஏற்ப அதன் வகைகளும் மாறுகின்றன.
C) எழுத்திலக்கணத்தின் வழி பண்புப் பெயர்ப் புணர்ச்சி தனி விதிகளைப் பெறுகிறது.
D) பண்புப் பெயர் தொகையாக வரும்போது பல்வேறு மாற்றங்களை அடைகிறது
ANSWER: B
117) இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்,
1) சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வரும்.
2) இவற்றில் பண்புப் பெயர்ச் சொற்கள் இடம்பெறாது.
3) இரு சொற்களுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வரும்.
4) மை, ஆன முதலான உருபுகளும் தொக்கி வரும்.
மேற்காணும் விளக்கங்களுள் தவறானதைத் தேர்க.
A) இவற்றில் பண்புப் பெயர்ச் சொற்கள் இடம்பெறாது.
B) ஆகிய’ என்னும் பண்புருபு மறைந்து வரும்.
C) சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வரும்
.
D) மை, ஆன முதலான உருபுகளும் தொக்கி வரும்.
ANSWER: D
118) இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது”- இக்குறட்பாவில் முரண்தொடை பயின்று வந்துள்ள சொற்களோடு பொருந்தும் _________ ,_________உருபுகள் பொருளை ஆழமாக உணர்த்துகிறது.
A) வேற்றுமை உருபு, உவம உருபு,
B) வினையுருபு, பண்புருபு
C) பண்புருபு, வேற்றுமை உருபு
D) உவம உருபு, வினையுருபு
ANSWER: C
119) உவமைத் தொகை செய்யுளில் இடம்பெறும்போது எடுத்துக்காட்டு அணி என்று பெயர் பெறுகிறது. அதற்குச் சான்றாகப் பொருந்தும் குறள் எது?
A) தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றெனத் தூறும் அறிவு
B) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
C) சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதொருசொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து
D) கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
ANSWER: A
120) _______ பல சேர்ந்து நின்றுபொருள் தருவது தொடர் எனப்படும்.
A) எழுத்துகள்
B) சொற்கள்
C) அசை
D) அடி
ANSWER: B
TNPSC Tamil MCQ Questions and Answers:
121) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒருசொல் போல் நிற்குமானால் அது _________ எனப்படும்.
A) எழுவாய்த் தொடர்
B) தொகாநிலைத் தொடர்
C) வேற்றுமைத் தொடர்
D) தொகைநிலைத் தொடர்
ANSWER: D
122) காலம் கரந்த பெயரெச்சம் என்பது _______
A) வினைத் தொகை
B) உவமைத் தொகை
C) பண்புத் தொகை
D) உம்மைத்தொகை
ANSWER: A
123) மதுரை சென்றான் ‘ என்னும் தொடரில் மறைந்துள்ள வேற்றுமை உருபு ______
A) இரண்டாம் வேற்றுமை உருபு
B) மூன்றாம் வேற்றுமை உருபு
C) நான்காம் வேற்றுமை உருபு
D) ஐந்தாம் வேற்றுமை உருபு
ANSWER: C
124) தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்
A) ஐந்து
B) ஆறு
C) நான்கு
D) இரண்டு
ANSWER: B
125) இறைத்தொண்டு” என்பதை விரித்து எழுதினால் _________ என்று வரும்
A) இறையால் செய்யும் தொண்டு
B) இறைக்குச் செய்யும் தொண்டு
C) இறையின்ன்கண் செய்யும் தொண்டு
D) இறையோடு செய்யும் தொண்டு
ANSWER: B
126) ‘எழுஞாயிறு‘ என்பது இலக்கணப்படி _______ தொகை ஆகும்
A) வினை
B) வேற்றுமை
C) உவமை
D) பண்பு
ANSWER: A
127) வேற்றுமைத் தொகை என்பது __________ இவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வருவது.
A) த், ட், ற், இன்
B) கிறு, கின்று, ஆநின்று
C) ஐ, ஆல், கு இன். அது, கண்
D) ப், வ், க்
ANSWER: C
128) “தாகமெடுத்தால் தண்ணீர் குடி”- இத்தொடரில் உள்ள தொகை
A) நான்காம் வேற்றுமைத் தொகை
B) மூன்றாம் வேற்றுமைத் தொகை
C) இரண்டாம் வேற்றுமைத் தொகை
D) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ANSWER: C
129) வளைக்கையால் கொடுத்தாள்‘ – இத்தொடரில் வளைக்கை என்பதில் தொக்கி நிற்பது ________
A) நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
B) இரண்டாம் வேற்றுமை உருபு
C) நான்காம் வேற்றுமை உருபு
D) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
ANSWER: D
130) கண்ணன் பால் பருகினான், முருகன் சென்னை சென்றான், இங்கு குப்பை கொட்டக்கூடாது கைபேசியில் தொடுதிரை வசதி உள்ளது. – இவற்றுள் பொருந்தாத தொடரைத் தேர்க
A) கைபேசியில் தொடுதிரை வசதி உள்ளது
B) முருகன் சென்னை சென்றான்
C) கண்ணன் பால் பருகினான்
D) இங்கு குப்பை கொட்டக்கூடாது
ANSWER: A
TNPSC Tamil MCQ Questions and Answers:
131) ‘சுடுமண் சிற்பக்கலை பழங்காலத்தில் சிறந்து விளங்கியிருந்தது’- இத்தொடரில் இடம்பெற்றுள்ள வினைத்தொகைச்சொல் எது?
A) சிற்பக்கலை
B) பழங்கலை
C) சுடுமண்
D) கலைகளுள் ஒன்று
ANSWER: C
132) “வினைத்தொகை” என்பது ————–
A) பெயரெச்சத்தில் காலம் காட்டும் இடை நிலைமறைதல்
B) வினையெச்சத்தில் காலம் காட்டும் இடை நிலைமறைதல்
C) முற்றெச்சத்தில் காலம் காட்டும் இடை நிலைமறைதல்
D) பெயரெச்சத்தில் காலம் காட்டும் இடை நிலை வெளிப்பட்டு வருதல்
ANSWER: A
133) வான்மழை,காட்டுப்பூ – இவற்றின் இலக்கணக்குறிப்பு முறையே ______________ என்பதாகும்
A) வேற்றுமைத் தொகை, வினைத்தொகை
B) வினைத்தொகை, வேற்றுமைத் தொகை
C) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
D) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை, ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ANSWER: D
134) அன்றும் இன்றும் என்றும் உயர்வான மொழி தமிழ்மொழி. அது எங்கள் மொழியே! – தடித்த எழுத்துகளில் உள்ள சொற்களைத் தொகுத்து எழுதக் கிடைப்பது _____________.
A) உயர்மொழி
B) உயரமான மொழி
C) உயர்ந்த மொழி
D) உயர்வான மொழி
ANSWER: A
135) எலேய்! சுடுசோறும் ஊறுகாயும் எடுத்து வச்சிருக்கேன் வந்து தின்னுட்டுப் போ” என்று ஆத்தா, வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராமுவிடம் கூறினார். இதில் சுடுசோறு, ஊறுகாய் என்று வினைத்தொகையில் ஆத்தா கூறியிருப்பதிலிருந்து நாம் உணர்வது,
1) ஆத்தாவிற்கு வினைத்தொகையின் இலக்கணம் அறிந்து பயன்படுத்தத் தெரியும்,
2) பேச்சுவழக்கில் இயல்பாகவே இவ்வகை இலக்கணங்கள் பயன்படுத்துவதுண்டு.
3) பொருளின் தன்மையை மிக நுட்பமாகஎடுத்துக் காட்ட இவ்வகைச் சொற்கள் பயன்படுகின்றன.
4) சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி இங்கு எளிதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தாத ஒன்றினைத் தேர்க.
A) பேச்சுவழக்கில் இயல்பாகவே இவ்வகை இலக்கணங்கள் பயன்படுத்துவதுண்டு.
B) சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி இங்கு எளிதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
C) பொருளின் தன்மையை மிக நுட்பமாகஎடுத்துக் காட்ட இவ்வகைச் சொற்கள் பயன்படுகின்றன.
D) ஆத்தாவிற்கு வினைத்தொகையின் இலக்கணம் அறிந்து பயன்படுத்தத் தெரியும்,
ANSWER: D
136) சென்னையிலிருந்து மும்பை செல்வதற்காகப் புறப்பட்ட விமானம் அதன் ________________ப் பாதையில் ஓடியபொழுதே பழுது கண்டுப்பிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப் பட்டது. – (பொருத்தமான சொல்லால் நிரப்புக)
A) ஓடிய தள
B) ஓடுகின்ற தள
C) ஓடும் தள
D) ஓடுதள
ANSWER: D
137) “பல பொருட்களை விற்கும் அங்காடியில் எழுதிய பொருள், எழுதுகின்ற பொருள், எழுதும் பொருள் கிடைக்கும்.” தொடரைச் சுருக்குக.
A) பல்பொருட்களை விற்கும் அங்காடியில் எழுது பொருள் கிடைக்கும்
B) பல்பொருள் அங்காடியில் எழுதுபொருள் கிடைக்கும்.
C) பல்பொருள் அங்காடியில் எழுதும் பொருள் கிடைக்கும்
D) பல்பொருட்களை விற்கும் அங்காடியில் எழுுதுகின்ற பொருள் கிடைக்கும்
ANSWER: B
138) தொகைநிலைத் தொடர்களின் பயன்பாடுகளாவன,
1) செய்தியைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
2) மொழியின் அழகினை மேம்படுத்திக் காட்டுதல்
3) சொல்லின் பொருளை மிக நுட்பமாக உணர்த்தல்
4) சொல்லின் பொருளை இருவேறாக உணர்த்தல். தவறான கூற்று எது எனத் தேர்க.
A) மொழியின் அழகினை மேம்படுத்திக் காட்டுதல்
B) சொல்லின் பொருளை இருவேறாக உணர்த்தல்
C) சொல்லின் பொருளை மிக நுட்பமாக உணர்த்தல்
D) செய்தியைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
ANSWER: B
139) சொல்லின் நுட்பமான பொருளை வினைத்தொகை உணர்த்துகிறது. எவ்வாறெனின்
1) தொகைச் சொல்லை விரிக்கும்போது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் சொற்களின் தொகுப்பு அமைந்திருக்கும்.
2) உலகில் நிலையாய் இருக்கின்ற அல்லது நிகழ்கின்றதனை வினைத்தொகையில் குறிப்பிடவர்.
3) வினைச் சொற்களைத் தொகுத்துக் கூற வேண்டிய இடங்களில் வினைத்தொகை இடம்பெறும்.
4) வினைச்சொல்லின் உருபான காலம்காட்டும் இடைநிலைகள் தொக்கி நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு பொருந்திவரும்.
இவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்க
A) வினைச்சொல்லின் உருபான காலம்காட்டும் இடைநிலைகள் தொக்கி நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு பொருந்திவரும்
B) உலகில் என்றும் அழியாமல் நிலையாய் இருக்கின்ற அல்லது தொடர்ச்சியாக நிகழ்கின்றவற்றை வினைத்தொகையில் குறிப்பிடுவர்.
C) தொகைச் சொல்லை விரிக்கும்போது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் சொற்களின் தொகுப்பு அமைந்திருக்கும்.
D) பல்வேறு வினைச் சொற்களைத் தொகுத்துக் கூற வேண்டிய இடங்களில் அவற்றை ஒரே சொல்லாகத் தொகுக்க வினைத்தொகை எடுத்தாளப்படுகிறது.
ANSWER: D
140) வினைச் சொற்கள் வேற்றுமையை ஏற்பதில்லை வெறும்பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்பதில்லை”- உவமைக் கவிஞர் சுரதா கூறுவதிலிருந்து நாம் உணர்வது, 1) வினைச சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேராது
2) வினைச் சொற்கள் தமிழ்ச் சங்கத்தில் சேராது
3) வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லோடு மட்டுமே வரும்
4) வினைச் சொல்லோடு அதன் உருபாகிய காலம்காட்டும் இடைநிலைகள் வரும் –பொருந்தும் மற்றும் பொருந்தாதவற்றைக் குறிப்பிடுக.
A) 1, 2, 4, பொருந்தும் கூற்றுகள் 3 மட்டும் பொருந்தாது
B) 1, 3, 4, பொருந்தும் கூற்றுகள் 2 மட்டும் பொருந்தாது
C) 2, 3, 4, பொருந்தும் கூற்றுகள் 1 மட்டும் பொருந்தாது
D) 1, 2, 3, பொருந்தும் கூற்றுகள் 4 மட்டும் பொருந்தாது
ANSWER: B
TNPSC Tamil MCQ Questions and Answers:
141) வேற்றுமைத் தொகை மொழியில் இடம் பெறுவதன் நோக்கம்
1) பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுவது.
2) நால்வகைச் சொற்களுள் இடைச் சொல் என்ற பிரிவினுள் அடங்குவது.
3) எழுவாய் மற்றும் செயபடுபொருளைப் பிரித்துக் காட்டுவது
4) சொல்லின் பொருளை வேறுவேறாக உணர்த்தப் பயன்படுவது. இத்தொடர்களில் சரியான மற்றும் தவறானவற்றைக் குறிப்பிடுக.
A) 1, 2, 3 சரி, 4 மட்டும் தவறு
B) 1, 2, 4 சரி, 3 மட்டும் தவறு
C) 1, 3, 4 ,சரி 2 மட்டும் தவறு
D) 2, 3, 4 சரி, 1 மட்டும் தவறு
ANSWER: A
142) பாடல் 1 : குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக் கேக்குதா?
பாடல் 2 : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை”
பாடல் 3 : அழகிய புலமே;உனத்திள மகள் நான் வளவனின் நிலமே; என தரசியும் நீ
பாடல் 4 : ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! இவற்றுள் வினைத்தொகை பயின்று வந்துள்ள பாடல் வரியினைத் தேர்க
A) அழகிய புலமே; உனத்திள மகள் நான் வளவனின் நிலமே; என தரசியும் நீ
B) உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை’
C) குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக் கேக்குதா?
D) ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
ANSWER: D